கோரிக்கை பதிவு

வீடுகளின் அருகில் தேங்கிய கழிவுநீரை அகற்றாவிட்டால் உரிமையாளருக்கு ரூ.500 அபராதம்

கடலூர் மாவட்டத்தில் தீவிர கொசு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் வீடுகளின் அருகில் தேங்கிய கழிவுநீரை உரிமையாளர்கள் அகற்றாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கடலூரில் கொசு தொல்லை ஒழிப்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவ லக வளாகத்தில் நடந்தது. மாவட்ட ஆட்சியர் சீத்தாராமன் தலைமை தாங்கி னார். சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் மீரா முன்னிலை வகித்தார். கொசுக்களை நிரந்தரமாக ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுப்பது குறித்து கொசு ஒழிப்பு குழு கூட்ட நிர்வாகிகள் எடுத்துரைத்தனர். நகர விரிவாக்கங்களால் பெருகி வரும் குடியிருப்புகள் பஞ்சாயத்து எல்லைக்குட்பட்டு வருவதால் நக ராட்சி நிர்வாகங்கள் கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொள்ளவதில் பிரச்சனை ஏற்படுகிறது என எடுத் துரைக்கப்பட்டது.
பின்னர் மாவட்ட ஆட் சியர் சீத்தாராமன் பேசுகை யில், “நகர விரிவாக்கம் காரணமாக பஞ்சாயத்துக்களில் அதிக எண்ணிக்கை யில் குடியிருப்புகள் பெருகி வருகிறது. இங்கு முறைப்படி கழிவு நீர் வெளியேற்ற நடவடிக்கை என்பது குறை பாடாக உள்ளது.
எனவே பஞ்சாயத்து எல்லையில் வீடுகள் பெருகி வந்தாலும் அதனை பஞ்சாயத்து தலைவர்கள் கொசு ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கொசுக்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்த ரசாயனம் பொருட்கள் காலகாலமாக பயன்படுத்தப்பட்டு வருவதால் கொசுக் கள் எதிர்ப்பு சக்தியை பெற்றுள்ளது என ஆய்வில் தெரிய வருகிறது.
இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் வீட்டு வாயில்களில் சாக்கடை உள்ளிட்ட நிரந்தர நீர் தேக்கங்களை தவிர்ப்பதற்கு பொது சுகாதார சட்டம் 1939ம் ஆண்டு 84(1), 86 மற்றும் 87(1) பிரிவுகளின் படி சட்ட ரீதியாக நகராட்சி ஆணையர்கள், உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அறிவுறுத்தலை மீறுபவர்களுக்கு ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படும் என்பது சட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது“ என்றார்.
மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக