கோரிக்கை பதிவு

கடலூரில் இன்று மாசிமகம்: படகு சவாரிக்கு போலீஸ் தடை

கடலூரில் ஞாயிற்றுக்கிழமை மாசிமகம் திருவிழா கொண்டாப்படுகிறது. இதையொட்டி கடலில் படகு சவாரிக்கு போலீஸ் தடைவிதித்து இருக்கிறது.தேவனாம்பட்டினம் கடற்கரைக்கு பல்வேறு கோயில்களில் இருந்தும் கடல் தீர்த்தவாரிக்கு உற்சவ மூர்த்திகள் அலங்கரிப்பட்ட பல்லக்குகளில் எடுத்து வரப்படுவதால் கடற்கரையில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கூடுவார்கள்.இதையொட்டி கடலூர் நகரிலும் தேவனாம்பட்டினம் கடற்கரையிலும் கடலூர் போலீஸ் துணைக் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் டி.எஸ்.பி. ஸ்டாலின் தலைமையில் நடந்தது. மாசிமகம் திருவிழாவுக்கு வருவோர் படகு சவாரிக்கு தடைவிதிப்பது. ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இல்லை.போலீஸôரும் கடற்கரை கிராம மக்களும் சுமார் 100 பேர், திருவிழாவுக்கு வரும் பொதுமக்கள் யாரும் கடலில் மூழ்கிவிடாதவாறு பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக