கோரிக்கை பதிவு

பேருந்து வசதி: கிராம மக்கள் கோரிக்கை

பேருந்து வசதி கோரி கிராம மக்கள் கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.

கடலூர் அருகே உள்ள தியாகவல்லி ஊராட்சியைச் சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து,​​ மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு:​ தியாகவல்லி ஊராட்சியில் 12 கிராமங்கள் உள்ளன.​

லெனின் நகர்,​​ பெரியார் நகர்,​​ ஸ்டாலின் நகர்,​​ அம்பேத்கர் நகர்,​​ நந்தன் நகர்,​​ வள்ளலார் நகர் கிராமங்களில் தலித்துகள் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கிறார்கள். பெரும்பாலானோர் கட்டடத் தொழில்,​​ மற்றும் கூலித் தொழில் செய்கிறார்கள்.​ ஏராளமான மாணவர்கள் அருகில் உள்ள ஊர்களிலும் கடலூரிலும் படிக்கிறார்கள். இவர்கள் அனைவரும் வெளியிடங்களுக்குச் செல்ல பஸ் வசதி போதுமானதாக இல்லை.​ நொச்சிக்காடு கிராமத்துக்கு வரும் ஒரே ஒரு பேருந்தை விட்டால் வேறு வழியில்லை.​ பேருந்தை தவறவிட்ட பலர் உப்பனாற்றைப் படகில் கடந்துச் சென்று பஸ்களைப் பிடிக்க வேண்டியது இருக்கிறது.​ மாணவர்கள் உரிய நேரத்துக்குப் பள்ளிகளுக்குச் செல்ல முடியவில்லை.​ கூலி வேலைகளுக்குச் செல்வோரும் பாதிக்கப்படுகிறார்கள்.​ கடந்த ஜனவரி 27-ம் தேதி படகு கவிழ்ந்து மாணவர்கள் உப்பனாற்றில் விழவேண்டிய நிலை ஏற்பட்டது.​ எனவே கூடுதலாகப் பேருந்துகள் விட வேண்டும்.​ உப்பனாற்றின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டும் என்றும் மனுவில் கோரியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக