கோரிக்கை பதிவு

கட்டடத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு ஏ.ஐ.டி.யூ.சி. கட்டடத் தொழிலாளர் சங்கத்தினர், கடலூரில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.2003 முதல் முடக்கி வைக்கப்பட்டு உள்ள கட்டடத் தொழிலாளர்களின் 65 ஆயிரம் மனுக்களுக்கு நிதி உதவி வழங்க வேண்டும். இதர வாரியங்களைப் போல் பதிவு செய்த நாள் முதல் வாரியப் பயன்களை வழங்க வேண்டும். நாலரை ஆண்டுகள் வாரிய உறுப்பினர்களாக இருந்தவர்களுக்கு 60 வயதில் ஓய்வூதியம் வழங்க வேண்டும். பதிவுக்காக கிராம நிர்வாக அலுவலரிடம் சான்று பெறும் முறையை ரத்து செய்ய வேண்டும். உதவித் தொகைகளை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்காக இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட ஆட்சியர் அலுவலம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்டடத் தொழிலாளர் சங்க மாவட்டத் துணைச் செயலாளர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். கடலூர் நகரத் தலைவர் ராமுமேஸ்திரி, புவனகிரி நகரத் தலைவர் வீரப்பன் மேஸ்திரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்டச் செயலாளர் எம்.சேகர், கட்டடத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் பி.பாஸ்கரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக