கோரிக்கை பதிவு

கடலோர கிராமங்களில் நாளை 2ம் கட்டமாக கைரேகை பதிவு

கடற்கரை பாதுகாப்பையொட்டி கடலோர கிராமங்களில் புகைப்படம் மற்றும் கைரேகை பதிவு சேகரிக்கும் பணி 2ம் கட்டமாக நாளை துவங்கிறது.கடற்கரை பாதுகாப்பை பலப்படுத்தும் பொருட்டு கடலூர் வட்டத்தில் உள்ள கிராமங்களில் தேசிய மக்கள் தொகை பதிவேட்டை தயாரிப்பது தொடர்பாக முதல் கட்டமாக ஏற்கனவே ஒவ்வொரு தனிநபர் பற்றி விபரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக 2ம் கட்டமாக 15 வயதும் அதற்கு மேற்பட்டவர்களின் புகைப்படம் மற்றும் கைரேகை பதிவை சேகரிக்கும் பணி நடந்தது. இந்த பணி 2ம் கட்டமாக நாளை (22ம் தேதி) முதல் 25ம் தேதி வரை நடக்கிறது.

இப்பணியின்போது கணக்கெடுப்பாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் புகைப்படம் எடுக்கும் கீழ்கண்ட நாளில் அந்தந்த கிராமங்களில் உள்ள மையங்களில் புகைப்படம் எடுக்கும் பணி மேற்கொள்வர். காயல்பட்டில் 22, 23 தேதிகளிலும், ஆண்டார்முள்ளிப்பள்ளம்,குடிகாடு கிராமங்களில் 22, 23 தேதிகளிலும், பச்சாங்குப்பம் கிராமத்தில் 22 முதல் 24 வரையிலும், சிங்கிரிகுடியில் 23ம் தேதியும், குண்டுஉப்பலவாடியில் 23ம் தேதி முதல் 25ம் தேதி வரையிலும், தியாகவல்லி, திருச்சோபுரத்தில் 23ம் தேதி முதல் 25ம் தேதி வரையும் நடைபெறும்.ஏற்கனவே புகைப்படம் மற்றும் கைரேகை பதிவு செய்யாமல் விடுபட்டவர்கள் அந்தந்த மையங்களில் வந்து புகைப்படம் மற்றும் கைரேகையினை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக